” நாட்டிலுள்ள மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான யோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்தார்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது 20 ஆவது திருத்தச்சட்டமூலம் உட்பட புதிய அரசியலமைப்பு பற்றியும், பொருளாதார திட்டங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போதே மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார். இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது.” – என்றும் அவர் கூறினார்.