மே – 09 தாக்குதல் – டான் பிரியசாத்தும் கைது!

சமூக செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ‘டான் பிரியசாத்’ என்பவர் இன்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாகோகம மற்றும் மைனாகோகம போராட்டக்காரர்கள்மீது கடந்த 09 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles