‘விழிநீர் பெருக்கெடுக்க இன்று விடைபெறுகிறார் ஆசான் மகேஷ்வரன்’

ஹட்டன் , நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்ட சந்தியில் மரக்கிளை முறிந்து வீழ்ந்தமையால் உயிரிழந்த ஆசிரியரின் சடலம் நேற்றிரவு (22) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆசிரியரின் சடலம் லோகி தோட்டத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று(23) பிற்பகல் 2 மணியளவில் சடலத்தை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தலவாக்கலை – லோகி தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான ஆசிரியர் மகேஷ்வரன், லிந்துலை சென். கூம்ஸ் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்களின் கணித பாட சித்திக்கு காரணமாக திகழ்ந்தவராவார்.

இதனிடையே, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் மரமொன்றை வெட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(22) மாலை சந்தேகநபர்கள் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles