நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என வெளியாகியுள்ள தகவல் போலியானது எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.