டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
190 பேர் காணாமல்போயுள்ளனர்.
4 ஆயிரத்து 517 வீடுகள் முழமையாகவும், 76 ஆயிரத்து 66 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் 6 லட்சத்து 11 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 21 லட்சத்து 79 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.










