4 மாதங்களுக்குள் இலஞ்சம் பெற்ற 32 அரச அதிகாரிகள் கைது!

2026 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 04 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் 51 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில், இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 3,349 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 314 வழக்குகள், நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

Related Articles

Latest Articles