கண்டியில் 4,775, நுவரெலியாவில் 483 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜூலை மாதத்தின் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 17, 051 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 38, 160 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் 483 பேரும், கண்டி மாவட்டத்தில் 4, 775 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 768 பேரும் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles