சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு, 20 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழு இன்று கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.