பொகவந்தலாவை நகரில் நேற்று மாலை நபரொருவர்மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு சாராருக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்மீது இருவர் வாள்வெட்டு மேற்கொள்ளும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராக்களில் பாதிவாகியுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டையில் பொகவந்தலாவ பொலிஸார் இறங்கியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்