இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி உறுதி!

யாழ். தையிட்டி, திஸ்ஸ விகாரையை மையப்படுத்தி வடக்கிலும், தெற்கிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நிறுத்தப்பட்டால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை. அதனை ஒடுக்குவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

‘திஸ்ஸ விகாரையை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படும் அரசியல் நிறுத்தப்பட வேண்டும். விகாரையின் விகாராதிபதி, அந்த பகுதியில் வாழும் மக்கள், நாக விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றிணைந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிப்பதில்லை. இனவாதம் இவர்களுக்கு தேவை.” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் எவ்விடத்தில் தொல்பொருள் சின்னங்கள், அடையாளங்கள் கிடைக்கப்பெற்றாலும் அவற்றை மதம் மற்றும் இன அடிப்படையில் பார்க்ககூடாது. தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் தான் அவற்றை பார்க்க வேண்டும்.

ஆனால் இனவாதிகள் தொல்பொருள் சின்னங்களை பௌத்தமா அல்லது இந்துவா என்றே பார்க்கிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு இனவாதம் வேண்டும். இனவாதிகளை மக்கள் தோற்கடித்தார்கள்.இருப்பினும் அவர்கள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை இல்லாதொழிக்க அரசாங்கம் என்ற அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles