பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்போவதாக கனடாவும் அறிவிப்பு!

 

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக கனடாவும் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி , ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கமைய ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூத குடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை, ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் என்பன அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles