சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்த ஏற்பாடு!

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகின்றது. உலக வங்கியின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்னர் மாநாட்டுக்குரிய திகதி நிர்ணயிக்கப்படும்.

பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், ஆரம்பக்கட்ட மதிப்பீட்டு அறிக்கை ஓரிரு வாரங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் உலக வங்கியிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் கோரிக்கை விடுத்திருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணிகள் சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles