இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வுபெற்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.
நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி சுனிதா வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளாா்.
அவா் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி முதல் முதல் ஓய்வுபெற்றதாக நாசா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள யூக்லிட் நகரில் 1965-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் திகதி சுனிதா வில்லயம்ஸ் பிறந்தாா்.
அவா் தந்தை தீபக் பாண்டியா குஜராத் மாநிலம் மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் பகுதியைச் சோ்ந்தவா். தாய் உா்ஸுலின் போனி பாண்டியா ஐரோப்பிய நாடானண ஸ்லோவேனியாவைச் சோ்ந்தவா்.
சுனிதா வில்லியம்ஸின் கணவா் மைக்கேல்.ஜே.வில்லியம்ஸ் அமெரிக்காவைச் சோ்ந்தவா்.
விண்வெளி ‘நாயகி’:1998-இல் சுனிதா வில்லியம்ஸை விண்வெளி வீராங்கனையாக நாசா தோ்ந்தெடுத்து பயிற்சி வழங்கத் தொடங்கியது.
2006, டிசம்பா் 9- ஆம் திகதி முதல்முறையாக அமெரிக்க விண்கலமான டிஸ்கவரியில் எஸ்டிஎஸ்-116 விண்வெளி திட்டத்தில் தனது விண்வெளி பயணத்தை தொடங்கினாா்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவா் 195 நாள்களுக்குப் பின் எஸ்டிஎஸ்-117 விண்வெளி திட்டக் குழுவுடன் அட்லாண்டிஸ் விண்கலத்தில் 2007, ஜூன் 22-ஆம் திகதி அவா் பூமிக்கு திரும்பினாா்.
2012-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் திகதிகஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூா் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு இரண்டாவது முறையாக பயணித்த அவா், 127 நாள்கள் விண்வெளியில் தங்கினாா்.
2024, ஜூன் மாதம் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோா் இருவரும் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா்.
8 நாள்களில் ஆய்வை மேற்கொண்டு அவா்கள் பூமிக்கு திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஸ்டாா்லைனா் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 286 நாள்கள் விண்வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் 2025, மாா்ச் மாதம் பூமிக்கு திரும்பினா்.
ஒட்டுமொத்தமாக மூன்று விண்வெளி பயணங்களையும் சோ்த்து அவா் விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிஷங்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளாா். இது உலகளவில் விண்வெளி வீராங்கனை ஒருவா் விண்வெளியில் மேற்கொண்ட அதிகபட்ச நடைபயணமாகும்.










