“மக்களுக்கான அரசியலை செய்யாது, பகைமை அரசியலையே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னெடுத்துவருகின்றார்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பொன்சேகா நேற்று முன்தினம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே திஸ்ஸ குட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ ராஜபக்ச குடும்பம்மீது பொன்சேகாவுக்கு வைராக்கியம் உள்ளது. அதனால்தான் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றார்.
அவர் முன்னெடுப்பது பகைமை அரசியலாகும்;. எனவே, அவர் கூறுவது தொடர்பில் கவனத்தில் எடுக்க வேண்டியதில்லை. மக்கள் நம்பமாட்டார்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.










