அமெரிக்காவுடன் அமைதி மற்றும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும் என தகவல்கள் வெளிவரும் நிலையில், பேச்சுமூலம் தீர்வை எட்டலாம் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் நடந்த பேச்சுகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததால், ஈரான் விரைவில் ஒரு ஒப்பந்த வரைவை முன்வைக்கலாம் என தெரியவருகின்றது.
ஈரானின் அணுசக்தி உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், கடுமையான கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்படவும் அந்த நாடு முன்வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒருபுறம் கெடு விதித்து எச்சரித்தாலும், பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான முடிவை எட்டுவதற்கான வாய்ப்புகள் தற்போதும் நிலவுகின்றன.










