லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 31 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஈரானும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதலின் இடையே ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் லெபனானின் பெய்ரூட்டில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், குவைத் மீது ஈரான் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதால், அமெரிக்கா அங்குள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்குமாறு அவசர எச்சரிக்கை விடுத்தது.

Related Articles

Latest Articles