ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை முடக்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க, அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளின் இராணுவ உதவியைக் கோரியுள்ளார்.
இருப்பினும், இந்தப் பதற்றமான சூழலில் போர்க்கப்பல்களை அனுப்ப ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக ஜப்பான் தனது எண்ணெய் இருப்புகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ள அதே வேளையில், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நேரடியாகப் போரில் ஈடுபடத் தயக்கம் காட்டுகிறது.
பிரிட்டன் போன்ற நாடுகள் வான்வழி கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பரிசீலித்தாலும், மேலதிக இராணுவத் தலையீடு நிலைமையை மோசமாக்கும் என்று அஞ்சுகின்றன.
இந்தப் பொருளாதாரப் பாதிப்புகளைக் குறைக்க சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.










