மத்திய கிழக்கு போர் இன்று 32 ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில் ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மையமான கார்க் தீவை Kharg Island ஆக்கிரமிப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஆலோசித்து வருகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் படைகள் அங்கு களமிறக்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்துவருவதாகக் கூறப்படுகின்றது.
ஈரானின் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு நிலையைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்புகின்றார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே வேளையில், பாகிஸ்தான் மூலமாக நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருப்பதாகவும், ஒரு ஒப்பந்தத்தை விரைவில் எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
