தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அலுவலகம், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியின் இலக்கம் 295 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய பிரதான அலுவலகம், இன்று நண்பகல் 12 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் நாடா வெட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.
இந்தக் கட்சி அலுவலகத் திறப்பு விழாவில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










