பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின்கீழ் 76 ஆயிரத்து 44 தோட்டத் தொழிலாளர்கள் நிரந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
18 ஆயிரத்து 955 பேர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (09) தற்போது நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் வழங்கிய பதில்களில் வெளியிடப்பட்ட புள்ளி விவரம் வருமாறு ,
பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளின்கீழ் 76,044 பேர் நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
18,955 பேர் தற்காலிக தொழிலாளர்களாவர்.
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின்கீழ்
2,736 பேர் நிரந்தர தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். தற்காலிக தொழிலாளர்கள் இல்லை.
அரச பெருந்தோட்ட கூட்டுதாபனதாபனத்தின்கீழ் நிரந்தர தொழிலாளர்களாக 1, 524 பேரும், தற்காலிக தொழிலாளர்களாக 573 பேரும் வேலை செய்கின்றனர்.










