பிரித்தானிய பிரதமர் ராஜினாமா

பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தமது பதவியிலிருந்தும், தொழிலாளர் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவை அவர் மன்னரிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதோடு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அட்டவணையை வெளியிடுமாறு கட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளார்.

ஜூலை 9 முதல் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறைக்குள் புதிய தலைமை உறுதி செய்யப்படும்.

அதுவரை நாட்டின் பிரதமராக ஸ்டார்மர் தொடர்ந்து பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles