நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைக்குள் நேற்று மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு துறைசார் அமைச்சர் தவறியுள்ளார். எனவே, அவர் பொறுப்பை ஏற்பதாக கூறுவதைவிட, பதவி விலக வேண்டும் எனவும் இடித்துரைத்தார்.
