நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் நேற்றிரவு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
