வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம்

ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம் என முன்னாள் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் 6 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டமை கவலைக்குரியது. ஒரே பொழுதில் அவர்கள் நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கின்ற ஏற்றுக்கொள்கின்றெ அதேவேளை இந்த சம்பவத்திற்கு மனிதாபிமான செயற்பாடும் அவசியம்.

தோட்ட முகாமைத்துவம் இந்த விடயத்தில் அசமந்தபோக்கில் இருந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ஜனவரி மாதம் வந்துள்ள நிலையில் உரிய தரப்பினருக்கு ஆறு மாதம் கடந்தும் தகவலை வழங்காமல் இருந்தது. அவர்களுடைய மேம்போக்கான தனத்தினை வெளிப்படுத்துகிறது.

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு சொந்தமான காணிகளில் பெருந்தோட்ட கம்பெனிகளின் அனுமதி இன்றி ஏதாவது கட்டிடங்களை நிர்மாணிக்கின்ற பொழுது குடியேறுகின்ற பொழுது அப்பாவி மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற பெருங்தோட்ட நிறுவனங்கள் இத்தகைய சம்பவங்களை எவ்வாறு அனுமதிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

இருந்தாலும் இன்று தோட்ட தொழிலாளர்கள் இருப்பிடங்கள் இன்றி காணப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு உடனடியான மாற்று நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஏதாவது ஒரு வீடமைப்பு திட்டத்தின் ஊடாக அவர்களுக்கு உடனடியாக குடியிருப்புகளை வழங்கி வைப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கமும் அமைச்சும் முன்னெடுக்க வேண்டும் அது தொடர்பில் குறித்த அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles