நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவை இணைத்து வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ’விண்ணை தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம் ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கவுதம் மேனன் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கவுதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள்.










