‘மாத்தளை மாசிமக திருவிழா இம்முறை ஆலய உள்வீதியில் மட்டுமே’

மாத்தளை அருள்மிகு அன்னைமுத்துமாரி அம்பிகையின் வருடாந்த மாசிமக மகோற்சவம் கொவிட் 19 காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்,சுகாதாரஅதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இம்முறை நடைபெறும்.

வருடாந்த உபயகாரர்கள் பரிபாலன சபை உறுப்பினர்கள் உட்பட வரையறுக்கப்பட்ட பக்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவரென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரிபாலன சபையின் தலைவர் விக்னேஸ்வரன் சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

வழமையாக நடைபெறும் கொடியேற்ற ஊர்வலம், பரவைக் காவடி, பால்குட பவனி, பஞ்சரத பவனி யாவும் அரச ஆலோசனைப்படி ஆலயத்தினுள்ளேயே நடைபெறும்.

வெளிமாவட்டத்தில் இருந்துவரும் அடியார்கள், சிரேஸ்ட பிரஜைகள், சிறுவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து அம்பிகையை தரிசிப்பதை தவிர்த்து தங்கள் இல்லங்களில் இருந்தே வழிபடுமாறு பரிபாலன சபையினர் சார்பில் வேண்டுகிறோம்.

அபிசேஷம், ஆராதனை, உள்வீதி திருவிழாயாவும் இணையதளம் வழியாக பார்வையிட்டு அம்பிகையின் அருட்கடாட்சத்தை பெற ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 03ஆம் திகதிவரைபஞ்சரத பவனியிலே நடுநாயகியாய் வலம் வந்து பக்தர்தம் அஞ்ஞான இருள் அகற்றி மெய்ஞானமெனும் அருள் ஒளி நல்கி, உலகெங்கும் வாழும் இந்துக்களுக்கும் தன் அருள் மாரி பொழிவது என்பது வராற்றுச் சான்றும், சிறப்பும் மிக்கது என்பதை இந்துக்களாகிய நாம் அனைவரும் அறிந்ததே!

அவ்வகையில் இவ்வருடமும் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருபத்தைந்து நாட்கள் அன்னை முத்துமாரி அபிசேகம், அலங்காரம், ஆராதனை என விழாக்கோலம் பூண்டு கணபதி, சிவன், அம்பாள், முருகன், சண்டேஸ்வரி சகிதமாக பஞ்சரதத்திலே சித்திரத் தேரிலே பவனிவரும் காட்சியை காணாத கண் தான் என்னவோ? என சிந்திக்க வேண்டிய நிலையில், நாம் இலங்கை நாட்டின் இன்றைய சூழ்நிலையிலே ‘கொரொனா 19’ என்ற கொடிய அசுரன் கையில் சிக்கித் தவித்து, ஆலயவழிபாடு, அபிசேகம், ஆராதனை என அகக்காட்சியில் காணவேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இன்றைய நிலைமைகளை கருத்தில் கொண்டு நாமும் நம் நாடும் ஆரோக்கியமான, ஆன்மீக உணர்வுகொண்டு அன்பே வடிவானவர்களாக வாழ அன்னை மாரியின் தேரோடும் காட்சியையும் நம் அகக்கண்களால் தான் கண்டு களிப்போமோ.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles