பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்று முன்தினம் 105 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று 197 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் பதுளை மாவட்டத்தில் இதுவரை 584 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.