21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சுதந்திரக்கட்சி!

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நிராகரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை கூடியது. இதன்போதே குறித்த அறிக்கையை நிராகரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.

குறித்த அறிக்கையில் 21/4 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகின்றார்.

இந்நிலையிலேயே அறிக்கையை நிராகரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles