ஆசிரியை ஒருவர் உட்பட தியத்தலாவையில் எழுவருக்கு கொரோனா

பண்டாரவளை தனியார் பாடசாலையில் கடமையாற்றி வந்த ஆசிரியை ஒருவர் உட்பட தியத்தலாவை நகரில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருப்பதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ள ஏழு பேரும் காகொல்லை கொவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 01-03-2021ல் 60 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை, இன்று வெளிவந்தது. அதற்கமையவே, மேற்படி ஏழு பேருக்கு கோவிட் – 19 தொற்று
உறுதியாகியிருப்பமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles