பசறை பஸ் விபத்து – சாரதி தொலைபேசி பயன்படுத்தினாரா? விசாரணை ஆரம்பம்

பசறை 13 வது மைல் கல்லருகே இடம்பெற்ற பஸ் விபத்தின்போது, அப்பஸ்சின் சாரதி கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாக பயணிகளும், அப்பஸ்சில் பயணிக்க முயன்றவர்களும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் உண்மையுள்ளதாவென்று, தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, பசறைப் பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பின் மத்தியில் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், பஸ்சாரதி தமது வாக்குமூலத்தில் விபத்து வேளையில்தான் கையடக்கத் தொலைபேசியை பாவிக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இச்சாரதி பொறுப்பற்ற வகையில் கடும் வேகத்தில் பஸ்சை செலுத்திவந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. கடும் வேகத்தைக் குறைக்குமாறு பஸ் பெண் பயணி ஒருவர் கூறிய போதிலும், அக்கூற்று சாரதியினால் செவிமடுக்கப்படவில்லையென்றும் தெரியவந்துள்ளது.

பதுளை அரசினர் மருத்துவமனையில் தற்போதைய நிலையில் 28பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் ஐவரின்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன.

பசறை வைத்திய அதிகாரி கே. எம். சமரபந்துவின் கருத்து, பசறையில் இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் படுகாயமுற்ற பலரது உயிரைக்காப்பாற்ற எம்மால் முடிந்தள்ளது. பசறையின் எமது மருத்துவமனையில் செயற்படும் இடர் முகாமைத்துவ செயற்திட்டம் சிறப்புற அமைந்திருந்தாலேயே, எம்மால் பலரைக்காப்பாற்றமுடிந்துள்ளதென்று, பசறை அரசினர் மருத்துவ மனை பிரதமவைத்திய அதிகாரிகே.எம். சமரபந்து குறிப்பிட்டார்.

பசறை விபத்தில்காயமுற்றவர்கள் குறித்து, பிரதம வைத்திய அதிகாரியிடம் வினவியபோதே, அவர்மேற்கண்டவாறுகூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles