‘மூன்றிலிரண்டு பலத்தை கொண்டுள்ள அரசுக்கு தோட்டக் கம்பனிகளைக்கூட கட்டுப்படுத்த முடிவில்லை’

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தன் வசம் வைத்துக்கொண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு, பெருந்தோட்டக் கம்பனிகளைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சம்பள நிர்ணய சபை எடுத்துள்ள முடிவைக்கூட கம்பனிகள் சவாலுக்குட்படுத்தியுள்ளன .

பெருந்தோட்டங்களின் நில உரிமை அரசு வசமே இருக்கின்றது. இப்படி இருக்கையில் கம்பனிகளை ஏன் கட்டுப்படுத்த முடியாது. சிலவேளை, கம்பனிகளின் பின்னால் அரசு உள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

ஊடகவியலாளர் மாநாடு (காணொளி வடிவம்)

https://www.facebook.com/sjbsrilanka/videos/854581438276252

Related Articles

Latest Articles