நுவரெலியா ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் கிறகறி வாவிக்கரையில் நேற்று (1-4-.2021) வியாழக்கிழமை முப்படையினரின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடனும் கலை கலாசார நிகழ்வுகளுடனும் கோலாகலமாக ஆரம்பமானது.
நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ரமேஸ்வரன், நுவரெலியாபிரதேசசபை தவிசாளர் வேலு யோகராஜா, மாவட்ட செயலாளர் நந்தனகலபட, நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகம சூரிய, பிரதி நகர முதல்வர் யதர்சனா உட்பட மாநகரசபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.
நேற்று ஆரம்பமாகிய வசந்தகால நிகழ்வுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கலை கலாசார நிகழ்வுகளும் குதிரைப்பந்தய போட்டி, மலர் கண்காட்சி விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.
கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக ஆரம்ப நிகழ்வில் பாடசாலை மாணவ மாணவிகளின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு நடைபெறவில்லை. அதேபோல வழமையாக நடைபெறும் காணி வேல் களியாட்ட விழாவும், மோட்டார் காரோட்டப் போட்டி, இசை நிகழ்ச்சியும் இம்முறை நடைபெறாது என்பதும் குறிப்பிடதக்கது.










