” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்தாலும் கம்பனிகளின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு சில தோட்டங்களில் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வேலை நாட்கள் குறைக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, ஆயிரம் ரூபா என்ற போர்வையில் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நாம் இவ்வளவு நாளாக மௌனமாக இருந்தோம். புத்தாண்டுக்கு பின்னர் போராட்டம் வெடிக்கும்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. குறிப்பிட்டார்.