கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) காலை 4 மணிவரை தொடர் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலையக நகரங்கள் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும், மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
ஹட்டன், நுவரெலியா, கொட்டகலை, தலவாக்கலை, பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் உள்ளிட்ட பெருந்தோட்டங்கள் அண்டிய நகரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் வழமைபோல் தொழில் செய்தனர். அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், நகரப்பகுதிகளே வெறிச்சோடிக்காணப்பட்டன.
நமது நிருபர்கள்
