ஒடுக்குமுறை ஆயுதமாகியுள்ள தனிமைப்படுத்தல் சட்டம்

கொரோனாவிலும் அரசியல் நடந்தும் இந்த அரசு, தனிமைப்படுத்தல் நடவடிக்கையைக்கூட ஒடுக்குமுறை செயற்பாடாக கையாண்டுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா நெருக்கடி ஒருபுறம், பொருளாதார சிக்கல் மறுபுறம். இன்று பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கப்பல் பற்றி எரிந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நஷ்டஈட்டை பெறுவதற்காக சுற்றுச்சூழலை நாசமாக்கியுள்ளனர். விவசாயிகளுக்கு உரமும் இல்லை.

தடுப்பூசி திட்டமும் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. துறைமுக நகரத்தை சீனாவுக்கு ஏற்றவகையில் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியதாலேயே தடுப்பூசி வழங்குவதில் இந்தியா இழுத்தடிப்பு செய்துவருகின்றது என நம்புகின்றோம். அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டுள்ளோம்.

எரிபொருட்களின் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020 இல் எரிபொருள்மூலம் அரசுக்கு உச்ச இலாபம் கிடைத்தது. நிதியம் உருவாக்கப்படும் என கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது என தெரியவில்லை.

இதற்கிடையில் இலவசக்கல்வியை தனியார் மயப்படுத்துவது மட்டுமல்ல தற்போது இராணுவ மயப்படுத்துவதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ வழியில்லை. இவற்றுக்கு எதிராக போராடுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தனிமைப்படுத்தல் நடவடிக்கை அடக்குமுறை செயற்பாடாக மாறியுள்ளது. கொரோனாவுக்குள் என்னவெல்லாம் செய்யலாமோ, அவற்றையெல்லாம் அரசு செய்கின்றது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles