3ஆவது அலைக்கு எதிர்க்கட்சிகளா பொறுப்புகூற வேண்டும்?

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தோல்விகண்டுள்ள ராஜபக்ச அரசு, தனது இயலாமையை மூடிமறைக்கவே வைரஸ் பரவலுக்கு எதிரணிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே காரணம் என அறிவிப்பு விடுத்துவருகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவல், கட்டுப்படுத்த முடியாத கட்டத்துக்கு வந்துள்ளது என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியும். எனவேதான் இதற்கான பழியை எவர் மீதாவது திணித்துவிட்டு தப்பித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன்பிரகாரமே வேலைநிறுத்தப்போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களே வைரஸ் பரவலுக்கு காரணம் எனவும், சுமார் 30 லட்சம்பேர்வரை வீதிகளில் இறக்கப்பட்டனர் எனவும் ஆளுந்தரப்பால் தகவல் வெளியிடப்படுகின்றது.

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் 99வீதமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்களில் 85 வீதமானோர் கோட்டாபய ராஜபக்சவுக்கே வாக்களித்தனர். எனவே, எதற்காக ஆசிரியர்கள் போராடுகின்றனர் என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் நாட்டை ஆளவில்லை. ஆனாலும் நாம்தான் ஆட்சியாளர்கள் என நினைத்துக்கொண்டே ஆளுந்தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதேவேளை, நாட்டின் உண்மை நிலைவரத்தை எடுத்துரைப்பதற்கு சுகாதார அமைச்சராக பதவி வகித்த பவித்ரா முயற்சித்துள்ளார். ஆனால் அவர் தடுக்கப்பட்டுள்ளார். நிலைமை மோசம், நாட்டை முடக்குமாறே அவர் வேண்டுகோள் விடுக்க சென்றுள்ளார். அவரின் கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை. இவ்வாறு தன்னிச்சையாக செயற்படும் அரசு, பழியை எதிரணிமீது சுமத்துவது நகைப்புக்குரிய விடயமாகும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles