நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றைய தினம் (07) மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,875ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.