100 அடி பள்ளத்தில் வீழ்ந்து பார ஊர்தி விபத்து – இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற பாரஊர்தி ஒன்றே, வீதியைவிட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது. இதனால், சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இருவரும் உடனடியாக வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டனர்.

‘பிரேக்’ பிடிபடாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன், க.நிஷாந்தன்

Related Articles

Latest Articles