எரிவாயு வெடிப்பால் பாதிக்கப்படுவோருக்கு ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவி வழங்கும் -சஜித்

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் அனைவருக்கும் தேவையான சட்ட உதவிகளை ஐக்கிய மக்கள் சக்தி இலவசமாக வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தரமற்ற அரசாங்கத்தை கொண்டுள்ள நாட்டிலிருந்து தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது எனவும் தரமற்ற ஆட்சியை அகற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles