தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் நடைபெறவுள்ளது.
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.பிக்களான வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கே இவ்வாறு வரவேற்பளிக்கப்படவுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து தொலைபேசி சின்னத்தின்கீழ் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, பதுளை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வெற்றிபெற்றது.
இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிட்ட கூட்டணியின் வேட்பாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.