அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். அப்படியானால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு என்ன நடக்கும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு வினா தொடுத்தார்.
” இந்நாட்டில் கண்டிய சட்டம், தேசவழமைச்சட்டம் என சில சட்டங்கள் உள்ளன. ஆனால் ஒரே நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி கூறுகின்றார். இது எப்படி சாத்தியம்?
19 இன் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. அவற்றுக்கு என்ன நடக்கும் என்பதையும் அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.” – எனவும் கிரியல்ல வலியுறுத்தினார்.










