நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (15) அறிவிக்கப்படவுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல காரணிகளே மின்வெட்டுக்கான காரணங்கள் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இதற்கு முன்னர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்தது.










