நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் L வரையான வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத்தடைஅமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் P முதல் W வரையான வலயங்களில் காலை 08.30 முதல் மாலை 06.30 வரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.