நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் நாளை இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை பொதுமக்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினம் தவிர்ந்த வேறு எந்த வேலை நாளிலும் திணைக்களத்திற்கு வருகை தருமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்










