கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்துக்குட்பட்ட குடாஒயா பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடமே இது.
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினாலேயே பஸ் தரிபிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பஸ்தரிப்பிடம் தற்போது உடைந்து, கூரைகள் இன்றி கடுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனை புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பஸ் தரிப்பிடத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்
இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும்.
சில மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பில் மலையக குருவி சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.