60 லீற்றர் டீசலுடன் பெண்ணொருவர் கைது!

லுணுகலை, ஹொப்டன் பகுதியில் 60 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், 33 வயதுடைய பெண்ணொருவர் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.

கைதான பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 16 ஆம் திகதி அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles