எயார்டெல் லங்காவின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷீஸ் சந்திரா நியமனம்

எயார்டெல் லங்கா நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் அஷீஸ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எயார்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது புதிய பங்களிப்பின் ஊடாக, இலங்கை சந்தையில் எயார்டெலின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த அஷீஸ் தனது பதவியை பயன்படுத்தி பிரமாண்டமான தொழில்நுட்ப வலைப்பின்னல் மற்றும் நவீன டிஜிட்டல் தளத்தை மேம்படுத்த முடியுமென நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நியமிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பாரதி எயார்டெல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான (இந்தியா மற்றும் தெற்காசியா) கோபால் விட்டால், ‘எதிர்கால மேம்பாட்டிற்காக பலமான தளத்தை உருவாக்கியுள்ள எயார்டெல் லங்கா நிறுவனத்திற்கு, அஷீஸை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். உலக தரத்தில் சேவைகளுக்குள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது என்ற எயார்டெல்லின் எண்ணக்கருவிற்கு அஷீஸிடம் உள்ள அனுபவம் அதிக பெறுமதியை சேர்க்குமென நான் நம்புகின்றேன். அதன்படி, எதிர்வரும் மாதங்களில் எயார்டெலினால் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான புத்தாக்கங்கள் பலவற்றை அனுபவிக்க முடியுமாகும். அஷீஸ் மற்றும் அவரது குழுவினருக்கு சிறந்த எதிர்காலம் அமையவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.’ என அவர் தெரிவித்துள்ளார்.

அஷீஸூக்கு இந்திய தொலைத்தொடர்பு துறையில் இரண்டு தசாப்த காலத்திற்கும் அதிகமான அனுபவம் உள்ளது. அவர் இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலவற்றில் தலைமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். எயார்டெல் லங்காவில் இணைவதற்கு முன்னர் அவர் வொடாஃபோன் ஐடியா நிறுவனத்தில் (Vadafone Idea Limited) (உத்திர பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட்) வர்த்தக பிரதானியாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இந்தியாவின் மெல்வியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்முறை பொறியியல் பட்டம் பெற்ற அஷீஸ் சந்திரா, முகாமைத்துவம் தொடர்பாக பொடார் முகாமைத்துவ நிலையத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். மேலும் லொசேனிலுள்ள IMD Business School, அகமதாபாத்திலுள்ள IIM மற்றும் ஹைதராபாத்திலுள்ள Indian School of Business ஆகிய கல்வி நிறுவனங்களிலும் தலைமைத்துவ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bharti Airtel Lankaவை பற்றி
2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles