இரண்டாம் நாள் பரீசிலனை இன்று – ’20’ குறித்த தீர்ப்பு 21 இற்குள்!

அரசியலமைப்பின் 20 சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள்மீதான பரீசிலனை இன்று (30) இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மனுக்கள்மீதான பரிசீலனையை நிறைவு செய்ய முடியும் என பிரதம நீதியரசர் நேற்று அறிவித்தார்.

மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு – சட்டவிளக்கம் ஒக்டோபர் 21 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்படும் என பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது திருத்தப்படும் என சட்டமாஅதிபர் நேற்று நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

Related Articles

Latest Articles