ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இதன்போதே தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
தவிசாளர் – சரத் பொன்சேகா
பொதுச்செயலாளர் – ரஞ்சித் மத்தும பண்டார
தேசிய அமைப்பாளர் – திஸ்ஸ அத்தநாயக்க
பொருளாளர் – ஹர்ஷ டி சில்வா
ராஜித சேனாரத்ன சிரேஷ்ட உப தவிசாளராகவும், வடிவேல் சுரேஷ் பிரதி செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உமா சந்திரா பிரகாசுக்கும் பிரதி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
