” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று (5) காலை பதிலளித்துள்ளார்.
இதன்போது அவர் கூறியதாவது,
” நாட்டில் மூன்று பொலிஸ் பிரிவுகளுக்குதான் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் எண்ணம் இல்லை. எனினும், வைரஸ் தாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இது விடயத்தில் முடிவெடுக்கப்படும். இன்றைய நாளுக்குள் அது பற்றி அறியமுடியும். ” – என்றார்.










